Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இஸ்ரேலில் பெண் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை

இஸ்ரேலில் பெண் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை

1 minutes read

இஸ்ரேலில் 51 வயதான ஷிரீன் அபு அக்லே என்ற பெண் ஊடகவியலாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் இராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டை குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஊடகவியலாளர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி சேனலான அல் ஜசிரா தெரிவித்துள்ளது.

இது குறித்து அல் ஜசிரா வெளியிட்ட அறிக்கையில்,

“எங்கள் சக ஊழியரை வேண்டுமென்றே குறிவைத்து கொன்றதற்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளை வன்மையாக கண்டிக்கிறோம். குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை மூடிமறைக்க எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

ஆனால் தேடுதல் வேட்டையின்போது பாலஸ்தீன பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் துப்பாக்கிச்சூட்டில் காயங்களுடன் உயிர் தப்பிய ஊடகவியலாளர் அலி சமூதி, இஸ்ரேல் இராணுவம் கூறுவது முற்றிலும் பொய் என்றும், இராணுவ வீரர்கள் தங்களை குறிவைத்தே சுட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

1997-ம் ஆண்டு முதல் அல் ஜசிரா பத்திரிகையாளராக பணியாற்றி வந்த ஷிரீன் அபு அக்லேவின் மறைவுக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More