இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காலநிலை மாற்றத்தில் இந்தியாவின் வகிபாகம் மிகக் குறைவு என்றாலும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக சர்வதேச சமூகத்துடன் இணைந்து நீண்ட காலப் பார்வையுடன் செயல்பட்டு வருகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
இயற்கையைப் பாதுகாப்பதற்கான நாட்டின் முயற்சிகள் பன்முகத்தன்மை கொண்டவை என்றும் கடந்த எட்டு ஆண்டுகளில் தமது அரசாங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை அனைத்து முக்கிய திட்டங்களிலும் மையமாகக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனத்தின் சத்குரு, கடந்த மார்ச் மாதம் லண்டனில் ஆரம்பித்த உலகளாவிய “மண்ணைப் பாதுகாப்போம்“ இயக்கத்தின் 75 ஆவது நாளைக் குறிக்கும் வகையில் விக்யான் பவனில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.