மெக்சிக்கோ :
வசந்த கால விடுமுறையைக் கொண்டாடுவதற்கு மெக்சிக்கோவுக்கு பயணிக்க வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க குடிமக்களின் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாநில பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
மெக்சிக்கோவில் போதைப்பொருள் வன்முறைக் கும்பல்களின் அச்சம் நீடிப்பதாக குறித்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாரத் தொடக்கத்தில் மருத்துவச் சிகிச்சைக்காக மெக்சிக்கோவுக்குச் சென்ற 2 அமெரிக்கர்கள், உள்ளூர்க் கும்பலால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
தவிர, மெக்சிக்கோவில் உள்ள சந்தையில் துணிகள் விற்பதற்காகச் சென்ற 3 பெண்கள் இரண்டு வாரத்துக்கு மேல் காணாமல் போயுள்ளனர்.
இந்தச் சம்பவங்களை அடிப்படையாக வைத்தே, டெக்சஸ் மாநில அதிகாரிகள், அமெரிக்க குடிமக்களை எச்சரித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி : மெக்சிகோவில் கடத்தப்பட்ட அமெரிக்கர்களில் இருவர் கொலை?