உலக நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுதல், நட்புறவை வளர்க்கும் பொது அமைப்பாக ஐ.நா உள்ளது. அதன் துணை நிறுவனங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அமைப்பு விளங்குகிறது. அது கல்வி, பண்பாடு, அறிவியல் மற்றும் தொடர்பு துறைகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறது.
யுனெஸ்கோ அமைப்பின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா இருந்து வந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் விலகி கொண்டது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதலில் ஐ.நாவின் நிலைப்பாடு குறித்து எதிர்ப்புத் தெரிவித்து, இந்த முடிவை அமெரிக்கா எடுத்தது.
அப்போது இஸ்ரேலும் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில், மீண்டும் யுனெஸ்கோ அமைப்பில் இணைய விரும்புவதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது. ஐ.நா அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.