Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை உயர்வு!

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை உயர்வு!

0 minutes read

கனடாவில் இருந்து அதிகளவான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே அங்கு நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி : கனடா செல்லும் மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் மாத்திரம் கனடாவில் இருந்து 7,032 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளதுடன், நாள் ஒன்றுக்கு சராசரியாக நாற்பது பேர் வரையில் கனடாவிலிருந்து நாடு கடத்தப்படுகின்றனர்.

எவ்வாறாயினும், கனடாவில் இருந்து நாடு கடத்தல்கள் அதிகரிக்கப்பட்டமைக்கு அகதி ஆதரவு அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More