Wednesday, May 1, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா 10 வருடங்கள் பணம் சேர்த்து விமானத்தில் பறந்த கிராம மக்கள்..!

10 வருடங்கள் பணம் சேர்த்து விமானத்தில் பறந்த கிராம மக்கள்..!

0 minutes read

நெல்லை மாவட்டம், தாட்டான்பட்டி கிராமத்தில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்திலும், பீடி சுற்றும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், இளைஞர்கள் இராணுவம், பொலிஸ் உள்ளிட்ட அரசு துறைகளிலும் சேவை புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இப்பகுதியை சேர்ந்த இராணுவத்தில் பணியாற்றும் இளைஞர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.

இதனால் தாட்டான்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும் எப்படியாவது ஒரு முறையாவது விமானத்தில் பறந்து செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

அதற்காக ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்கத் திட்டமிட்டனர்.

அதன்படி, சுமார் 10 ஆண்டுகள் சேமித்து, கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு புனித சுற்றுலாவாக விமானம் மூலமாக கோவா புறப்பட்டனர்.

அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 134 பேர் இவ்வாறு விமானத்தில் பறந்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபல்யமாகியுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More