
வூகானில் கொரானா பரவுவதை அம்பலப்படுத்திய பின் மாயமான சீன பத்திரிகையாளர் லி ஜிஹுவா (Li Zehua) மீண்டும் வெளியுலகத்திற்கு வந்துள்ளார்.
கொரோனா தொற்று பரவுவதை வீடியோ வாயிலாக உலகிற்கு தெரிவித்த அவர் இரண்டு மாதங்களாக காணாமல் போய்விட்டார். அவரையும் சேர்த்து மொத்தம் 3 சீன பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றை உலகிற்கு பகிரங்கப்படுத்தினர். இந்த நிலையில் மீண்டும் தோன்றிய லி ஜிஹுவா, தம்மை போலீசார் பிடித்துக் கொண்டுபோய் தடுப்புக் காவலில் வைத்திருந்ததாக கூறியுள்ளார். பிப்ரவரி மாதம் அவர் வெளியிட்ட வீடியோவில், வெள்ளை காரில் போலீசார் துரத்தும் காட்சிகளும், வீட்டில் போலீசார் நுழையும் காட்சிகளும் ஒளிபரப்பானது.