ஸ்பெயின் நாட்டில் மருத்துவப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில், வேலை உறுதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
தலைநகர் மாட்ரிட்டில், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஏற்கெனவே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியிலும் மிகுந்த சிரமத்தில் உள்ளதாக போராட்டக்காரர்கள் கூறினர். ஆனால், தங்களுக்கு எதிர்காலத்தில் நிரந்தர வேலை மற்றும் நிலையான வருவாய் பெற எந்த உத்தரவாதமும் இல்லை என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சிகிச்சை அளிக்கும் தங்களது கோரிக்கைகளுக்கு அரசு பதில் அளிக்கவேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.