வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளைய (புதன்கிழமை) தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டங்களை மீளப் பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும் முனைப்புடன் மத்திய அரசு செயற்பட்டு வருகின்றது.
இதற்காக பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாளை பிற்பகல் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உச்சநீதிமன்றம் நியமித்த பேச்சுவார்த்தைக்கான குழு தனது முதல் கூட்டத்தை நேற்று கூட்டியது. விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்றும் அது குறித்து டெல்லி பொலிஸார் உரிய முடிவை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.