டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை பற்றி கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது என தமிழக அரசு கூறியது. வதந்திகள் பரப்புவது கவலை அளிக்க கூடியது என உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையில் தமிழக அரசு வாதம் செய்துள்ளது.
141 அடிக்கு மேல் உயர்த்தினாலும் முல்லைப் பெரியாறு பாதுகாப்பானதே என பல ஆய்வுகள் கூறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தில் மாற்றம் தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய நீர்வள ஆணையம் தகவல் கூறியுள்ளது.