Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் துன்பகரமானது!

வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் துன்பகரமானது!

1 minutes read

டெல்லி: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் உறுதியுடன் துடிப்பான புதிய பயணத்தை தொடங்குவதற்கான நேரம் இது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் 10 வது தவணையாக விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் துன்பகரமானது என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இன்று, நாம் புத்தாண்டில் நுழையும் வேளையில், கடந்த ஆண்டில் நமது முயற்சிகளில் இருந்து கிடைத்த உத்வேகத்தை கொண்டு, புதிய தீர்மானங்களை நோக்கி நகர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இன்று ஒவ்வொரு இந்தியனின் சக்தியும் ஒரு கூட்டு சக்தியாக மாறி, நாட்டின் வளர்ச்சிக்கு புதிய வேகத்தையும் புதிய ஆற்றலையும் அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More