Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சம் அடையும் | அமெரிக்க விஞ்ஞானி

இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சம் அடையும் | அமெரிக்க விஞ்ஞானி

1 minutes read

இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சமடையலாம், தினமும் 5 இலட்சம் பேருக்கு தொற்று ஏற்படலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவ விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. நேற்று ஒரேநாளில் 1 இலட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு புதிதாக கொரோனா உறூதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சமடையும் என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவ விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், ‘உலகளாவிய சுதந்திரமான சுகாதார ஆராய்ச்சி மையம்’ என்ற மையம் இயங்கி வருகிறது.

இந்த மையத்தின் தலைவரும், அறிவியல் விஞ்ஞானியுமான வைத்தியர் கிறிஸ்டோபர் முராரே இந்தியாவின் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறுகையில்,

இந்தியாவை பொறுத்தவரை அடுத்த மாதம் கொரோனா உச்சம் பெறும் என நாங்கள் கருதுகிறோம். கொரோனா உச்சமடையும்போது தினமும் 5 இலட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படலாம்.

அதேவேளை, கடந்த அலையான டெல்டா பாதிப்புடன் ஒப்பிடும்போது இப்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கபடுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைவாகவே இருக்கும்’ என்றார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More