Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

1 minutes read

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி கோவிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

பின்னர் தூய்மை பணிகள் முடிந்ததும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு 12 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதையொட்டி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலுங்கு வருடபிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய நிகழ்வுகளுக்கு முன்பு ஒரு வருடத்தில் நான்கு முறை செவ்வாய்க்கிழமைகளில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

இதையொட்டி கோவில் கர்ப்பாலயத்தின் கூரைகள், சுவர்கள் மற்றும் பிற உபாலயங்களில் பரிமளம் என்ற சிறப்பு நறுமண கலவை பூசப்படும்.

வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வசதி செய்து தர வேண்டும் என்பதால், திருமலையில் இன்று அறைகளை ஒதுக்கவில்லை.

பக்தர்கள் அனைத்து கொரோனா விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்றி தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More