Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை!

அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை!

1 minutes read

இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான மறைமுகப் போர் தொடர்ந்து வருகிறது. அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை என இராணுவ தளபதி நரவனே தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த புரிந்துணர்வு கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பின் எல்லையில் அத்துமீறல் என்பது ஏறக்குறைய பூஜ்யம் என்ற அளவில் குறைந்துவிட்டது.

எனினும் இந்தியாவிற்குள் ஊடுருவும் வகையில் எல்லைக்கு அந்த பக்கம் 350 முதல் 400 பயங்கரவாதிகள் வரை முகாம்களில் தயாராக உள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மறைமுகப் போர் தொடர்ந்து வருகிறது. அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை. தொடர்ந்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More