Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவினால் 400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவினால் 400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0 minutes read

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 79 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 55 இலட்சத்து 83 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி நேற்று ஒரேநாளில் 1 இலட்சத்து 88 ஆயிரத்து 157 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரம் 1 இலட்சத்து 83 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் நேற்று ஒரேநாளில் 442 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 86 ஆயிரத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More