Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மும்பை அடுக்குமாடி தீவிபத்து – பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

மும்பை அடுக்குமாடி தீவிபத்து – பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

1 minutes read

மும்பையின் தார்டியோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 20 தளங்கள் கொண்ட அந்தக் குடியிருப்பின் 18-வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். மீட்புப்பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், மும்பை தார்டியோ அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தோர் குடும்பத்துக்கு தலா 50,000 ரூபாய் நிவாரணம் அளித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More