செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மின்தடையால் திருமண விழாவில் மணப்பெண்கள் மாறியதால் பரபரப்பு

மின்தடையால் திருமண விழாவில் மணப்பெண்கள் மாறியதால் பரபரப்பு

1 minutes read

மின்சாரத் துண்டிப்பால்  பல்வேறு இன்னல்களுக்கும் மக்கள் உள்ளாவது வழமையாகும். 

ஆனால் இந்த மின்சாரத் துண்டிப்பு இந்தியாவைச் சேர்ந்த சகோதரிகள் இருவரின் திருமண வாழ்வையே தடம்புரளச் செய்துள்ளது.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள அஸ்லனா கிராமத்தைச் சேர்ந்த சகோரிகளுக்கு ஒரே நாளில் திருமணத்திற்கு நாள் நிர்ணயிக்கப்பட்டது.

திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மண மேடை எங்கும் இருள் நிலவியது.

இந்நிலையில் இந்து  மத பாரம்பரிய வழக்கப் பிரகாரம் சிவப்பு நிற  பட்டாடை அணிந்து மலர்களான  முகத்திரை அணிவிக்கப்பட்டு  மணமேடைக்கு மணமகள்களான  சகோதரிகள் இருவரும் அழைத்து வரப்பட்டனர்.

மணமேடையில் குத்துவிளக்குகள் மற்றும் ஹோம குண்டத்திலிருந்து  வெளிப்பட்ட சொற்ப வெளிச்சத்தைத் தவிர பெருமளவில் இருள் நிலவியது.

இந்நிலையில் மணமகள்மார் இருவரும் தவறுதலாக அவரவர்க்குரிய மணமகனுக்கு அருகில் அமர வைக்கப்படாது  இடம்மாற்றி அமர வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து மதகுரு முதலாவது  சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனை இரண்டாவது  சகோதரிக்கும் இரண்டாவது சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனை முதலாவது சகோரிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

மதகுரு  இருளில் மணமகள்மாரை அடையாளம் தெரியாது  தவறாக  வழிநடத்தியதாலேயே இவ்வாறு திருமணத்தில் ஆள்மாறாட்டம் இடம்பெற்றதாக மணமகள்மாரின் தந்தையான ரமேஷ் லால் தெரிவித்தார்.

இந்த விபரீத திருமணம் குறித்து பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் செவ்வாய்க்கிழமை(10) இரவு தகவல்களை வெளியிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.