Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு

1 minutes read

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக அரசு விடுத்துள்ளது.

அதாவது, மாற்றுத்திறனாளிகளின் உடல் குறைகளைச் சுட்டிக்காட்டி, அவர்களது மனங்களை நோகடிக்கும் வகையில் இருந்த வாய்ப்புகளைத் தடுக்கும் விதத்தில் புதிய சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.

இந்தப் புதிய சட்டத் திருத்தம் தொடர்பான விவரத்தை, அரசு இதழ், இன்று (26) வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கும் மகிழ்ச்சி

புதிய சட்டத் திருத்தத்தின் கீழ், இனி புதிய மாணவர் சேர்க்கையின்போது, காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் பயன்படுத்தப்படாது.

உயர் கல்வி மாணவர் சேர்க்கையின்போதும் இது போன்ற கேள்விகள் தவிர்க்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதில் மாற்றுத்திறனாளிகள் என்று குறிப்பிட்டே விண்ணப்பங்கள் பதிவு செய்தல், தேர்வுக்கான சலுகைகள் கோருதல் போன்றனவற்றை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More