Saturday, May 4, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் 62 வயது முதியவரைக் கொன்றதாக வாலிபர் மீது குற்றச்சாட்டு

62 வயது முதியவரைக் கொன்றதாக வாலிபர் மீது குற்றச்சாட்டு

0 minutes read

நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யதாக இளைஞன் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேற்கு லண்டனின் ஹான்வெல்லில் உள்ள பாஸ்டன் சாலையில் நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை, தாக்கப்பட்டதாக பெருநகர பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தாக்குதலுக்கு உள்ளான, இன்னும் முறையாக அடையாளம் காணப்படாத 62 வயதான ஒருவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

அவர் திங்கட்கிழமை ஈலிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். அத்துடன், மேலும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகள் நிலுவையில் இருக்கும் நிலையில், 20 வயதுடைய இளைஞன், 16 வயதுடைய மற்றொரு சிறுவன் ஆகியோர் மேலதிக நடவடிக்கையின்றி விடுவிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் வேறு யாரையும் தேடவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More