Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் ஜமாலின் கொலையில் நம்பகத்தன்மை இல்லை என தெரிவிப்பு!

பிரித்தானிய பிரதமர் அலுவலகம் ஜமாலின் கொலையில் நம்பகத்தன்மை இல்லை என தெரிவிப்பு!

1 minutes read

 

ஜமாலின் கொலை குறித்த விளக்கம் நம்பகத்தன்மை குறைவானதாகக் காணப்படுவதாகக் அந்நாட்டு மன்னர் சல்மானிடம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கூறியதாக, மேயின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பில் தெரேசா மே, உண்மையில் என்ன நடந்தது என்பதை உடனடியாகத் தௌிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளதென்பதை நினைவில்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், இந்த விடயம் தொடர்பிலான துருக்கியின் விசாரணைக்கு சவுதி அரேபியா ஒத்துழைக்க வேண்டும் எனவும் விசாரணையின் பின்னர் வௌியாகும் முடிவில் வௌிப்படைத் தன்மை காணப்பட வேண்டும் எனவும் பிரதமர் தெரேசா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஊடகவியலாளர் ஜமால் கஷோகி, தூதரகத்தினுள் இடம்பெற்ற மோதலின்போது உயிரிழந்தார் என சவுதி அரேபியா, ஒருசில நாட்களின் பின்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More