வௌிவாரிப் பட்டதாரிகளுக்கு இந்த மாத இறுதி முதல் அரச தொழில்களை வழங்கவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு உறுதியளித்தாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் தெரிவிக்கின்றது,
அனைத்து பட்டதாரிகளுக்கும் பாகுபாடின்றி தொழில் வழங்கக் கோரி கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் எதிர்ப்பு பேரணியொன்றும் இடம்பெற்றது,
இதன் போது லோட்டஸ் சுற்றுவட்ட வீதி காவல்துறையினரால் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது,
எவ்வாறாயினும் பின்னர் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் அதிகாரிகளுக்கும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகளின் சங்கத்தினருக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது,
இந்தக் கூட்டத்தின் போது தொழில் வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்டதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகளின் சங்கத்தின் ஏற்பாட்டாளர் குறிப்பிட்டார்.