0
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதனை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உறுதிப்படுத்தினார்.
ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் தலைவருக்கும் இடையில் தேர்தல் திகதி தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.இம்முறை தேர்தல் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.