கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச வைத்தியசாலையில் நோயாளிகள் காத்திருக்க வைத்தியர் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரும் சக ஊழியரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் 07/09/2020 காலை பளை பிரதேச வைத்தியசாலையில் கடமை நேரத்தில் இடம்பெற்றதாகவும், நோயாளர்கள் பல மணி நேரம் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்து 45நாட்களான தாயார் ஒருவர் ஒரு மாத குழந்தையுடன் வருகை தந்துள்ளார். இவர் உடல் சோர்வான நிலையில் வந்துள்ளார்.
இவரை சோதித்த கடமையில் இருந்த வைத்தியர் அவரை இரத்த பரிசோதனை செய்து வருமாறு கூறியுள்ளார். அதனையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவும் 09/09/2020 வரும் எனவும் கூறியுள்ளனர். அதன் பின் அந்த தாயார் மருந்தெடுப்பதற்காக சென்ற போது மருந்தகத்தில் மருந்து வழங்குனர் நீண்ட நேரமாக இல்லை.
வைத்தியசாலை கடமையில் உள்ள அனைத்து ஊழியர்கள் உட்பட வைத்தியர் எல்லோரும் சக ஊழியரின் பிறந்த தின கொண்டாட்டம் வைத்தியசாலையின் மேற்பகுதியில் கொண்டாடப்பட்டது.
கடமை நேரத்தில் அனைவரும் பிறந்த தினம் கொண்டாடுகிறார்கள் என கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலம் அறியப்பட்டது.
அதன் பின் அந்த தாயாரின் கணவர் வைத்தியரை சந்திக்க வினாவியுள்ளார். மேலே செல்ல அனுமதி இல்லை என பாதுகாப்பு உத்தியோகத்தரால் கூறப்பட்டது.
இதையடுத்து அவரின் ஆனையை ஏற்று அவர் கீழே நின்று வைத்தியரை வருமாறு கூறியுள்ளார்.
அதற்கு வைத்தியர் காவலாளியிடம் பதில் அளித்ததாவது, அந்த தாயாரின் கணவரை வெளியில் பிடித்து விடும்படியும் இல்லாவிடில் பொலீசாருக்கு தகவல் கொடுத்து வெளியேற்றும்படியும் கூறியுள்ளார்.
அதன் பின் அந்த தாயாரும் கணவரும் வைத்தியசாலையை விட்டு வெளியேறினார்கள்.
அதன் பின் வைத்தியரின் வருகையை உறுதிபடுத்திய பின் மருந்து சிட்டையை கொண்டு மருந்தெடுப்பதற்காக வருகை தந்த அந்த குடும்பத்தார், அங்கு பணியாற்றும் கடமை நேரத்தில் பிறந்த நாளை கொண்டாடி நோயாளர்களையும் காத்திருக்க வைத்து அதை கேட்க சென்ற பொதுமக்களையும் அவதூராக பேசியதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு மீண்டும் வருகை தந்த அந்த குடும்பத்தாருடன் வைத்தியர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.