கிளிநொச்சி மாவட்டத்தில் 510 மாணவர்களுக்கு சுவிஸ் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் நிதி ஆதரவில் ரூபா 800.00 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வெளிச்சம் நிறுவனம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் அ.த.க.பாடசாலை, பாரதிபுரம் மகா வித்தியாலயம் மற்றும் மலையாளபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்கும் 510 மாணவர்களுக்கு சுவிஸ் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் நிதி ஆதரவில் ரூபா 800.00 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வெளிச்சம் நிறுவனம் ஊடாக நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள கிராமபுற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றலை ஊக்குவிக்கும் நோக்குடன் பாடசாலைகள் தோறும் இவ்வாறான செயற்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடு்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.