இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 67 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் ஆண்கள் 43 பேரும் பெண்கள் 24 பேரும் அடங்குவதாக அந்தப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மே மாதம் 17ஆம் திகதி முதல் ஜுன் 8ஆம் திகதி வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
6 பேர் வீட்டிலும் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதும் 56 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1910 ஆக அதிகரித்துள்ளது.