Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் | சுப்ரமணியன் ஸ்வாமி

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் | சுப்ரமணியன் ஸ்வாமி

1 minutes read

பிரதமரின் இல்லங்களைக்கூட தீயிட்டுக்கொளுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்துவதெனில், அந்த கலகக்காரர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்கு எவ்வகையிலும் தகுதியற்றவர்களாவர் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் ஸ்வாமி தெரிவித்துள்ளார்.

‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ ஆகிய இடங்களில் கடந்த திங்கட்கிழமை அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத்தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை நிலையொன்று தோற்றம் பெற்றுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவொன்றைச் செய்திருந்த சுப்ரமணியன் ஸ்வாமி, ‘அரசியலமைப்பு முறைமையை நிலைநாட்டுவதற்கு இந்திய இராணுவம் அனுப்பிவைக்கப்படவேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் அவர் செய்திருக்கும் மற்றொரு பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‘பிரதமரின் இல்லங்களைக்கூட தீயிட்டுக்கொளுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்துவதெனில், அந்த கலகக்காரர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்கு எவ்வகையிலும் தகுதியற்றவர்களாவர். எமது அயல்நாடு மற்றுமொரு லிபியாவாக மாறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது’ என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More