Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசியல் தலைவர்கள் இலங்கை மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் | பரிசுத்த பாப்பரசர் வேண்டுகோள்

அரசியல் தலைவர்கள் இலங்கை மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் | பரிசுத்த பாப்பரசர் வேண்டுகோள்

1 minutes read

அரசியல் தலைவர்கள் இலங்கை மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டுமென பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, போராட்டங்கள் வன்முறையாக மாறி பலரும் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கை மக்கள் அமைதியான வழியில் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் எனவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

பாப்பரசர் பிரான்ஸிஸ்  இலங்கையின் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், மக்களின் கோரிக்கைகளுக்கு ஆளும் கட்சி அரசியல் தலைவர்கள் செவிசாய்க்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அவர் மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கவும், மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு முழு மரியாதையை உறுதிப்படுத்தவும் பொறுப்புள்ள அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

வன்முறைக்கு அடிபணியாமல், அமைதியான அணுகுமுறையைப் பேணுமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்துகின்றேன்.

பாப்பரசர் பிரான்சிஸ் இன்று புதன்கிழமை பொது வெளியில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.

மேலும், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார சவால்கள், பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் கண்டித்த 24 மணி நேரத்திற்குள் பாப்பரசரின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More