Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குமுதினி படுகொலை 37ஆவது ஆண்டு நினைவேந்தல் லண்டனில்!

குமுதினி படுகொலை 37ஆவது ஆண்டு நினைவேந்தல் லண்டனில்!

5 minutes read

இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான படுகொலையின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்ற குமுதினிப் படுகொலை இடம்பெற்று 37 வருடங்கள் கடந்த நிலையில் இன்று லண்டனில் இந்த நினைவஞ்சலிக் கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும், புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட தினமாகும்.

1985 ஆம் ஆண்டு காலை 07 மணி அளவில் சுமார் 67 பேருடன் பயணித்த குமுதினி படகை சுற்றிவளைத்த கடற்படையினர் குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள் என பாராது 36 பேரை குத்தியும் வெட்டியும் கொலை செய்தனர்.

குமுதினிப்படகு படுகொலையில் அப் படகில் இருந்து தப்பிய திரு சாந்தலிங்கம் அவர்கள் இந்த நிகழ்வில் சாட்சியாக கலந்துகொண்டு தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More