Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் கட்டண வரையறையில் மாற்றம் !

வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் கட்டண வரையறையில் மாற்றம் !

1 minutes read

வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் கட்டண வரையறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள அதிகபட்ச கட்டண அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று (24) முதல் அமுலாகும் வகையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் காஞ்சன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு ஆகக்கூடுதலாக 2,500 ரூபாவுக்கு எரிபொருளை நிரப்ப முடியும்.

முச்சக்கர வண்டிகளுக்கு ஆகக்கூடுதலாக 3,000 ரூபாவுக்கு எரிபொருளை நிரப்ப முடியும்.

கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு ஆகக்கூடுதலாக 10,000 ரூபாவுக்கு எரிபொருளை நிரப்ப முடியும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More