நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் யாரென்பதை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி பதில் நிதிமையச்சராக தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே செயற்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
அத்துடன், புதிய நிதி அமைச்சர் தொடர்பான முடிவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர்களே எடுப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.