Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மாற்றமடைந்து வரும் நிலவரத்தை அவதானிக்கின்றோம் | பிரிட்டன்

இலங்கையில் மாற்றமடைந்து வரும் நிலவரத்தை அவதானிக்கின்றோம் | பிரிட்டன்

1 minutes read

இலங்கையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை உட்பட வேகமாக மாற்றமடைந்து வரும் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதையஅரசியல் பொருளாதார சவால்களிற்கு அனைத்து தரப்பினரையும் ஜனநாயக ரீதியில் அமைதியான அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய தீர்வை காணுமாறு ஊக்குவிக்கின்றது என பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய இணை அமைச்சர் அமன்டா மில்லிங் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக ரணில்விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமை உட்பட வேகமாக மாறிவரும் சூழ்நிலையை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் அனைத்து தரப்பினரையும் சட்டத்தின் ஆட்சியை மதிக்குமாறும் வன்முறைகளை பின்பற்றவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

உலக வங்கி சர்வதேச நாணயநிதியம் போன்ற பன்னாட்டு அமைப்புகளின் மூலம் பிரிட்டன் உதவிகளை வழங்குகின்றது சர்வதேச நாணயநிதியத்தில் பிரிட்டன் ஐந்தாவது பெரிய பங்குகளை கொண்டுள்ளது.ஐநாவிற்கும் உலக உணவு ஸ்தாபனத்திற்கும் அது பெரும் பங்களிப்பை வழங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் பிரிட்டனிற்கு குறிப்பிடத்தக்க குரல் உள்ளது இலங்கையின் கடன்நெருக்கடிக்கான தீர்வுகள் குறித்து சக பாரிஸ் கழக உறுப்பினர்கள் உலக வங்கி உட்பட பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து செயற்படுகின்றோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More