Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தவறிழைத்தோர் தீர்க்கமான முடிவெடுக்கச் சந்தர்ப்பம்! – ரணில் தெரிவிப்பு

தவறிழைத்தோர் தீர்க்கமான முடிவெடுக்கச் சந்தர்ப்பம்! – ரணில் தெரிவிப்பு

1 minutes read

“வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்கள் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு என்று எவரும் அர்த்தம் கொள்ளக்கூடாது. தவறிழைத்தோர் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது தீர்க்கமான முடிவெடுக்கச் சந்தர்ப்பம் உண்டு.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

2023 ‘பட்ஜட்’ இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம் தொடர்பில் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எந்தச் சதி முயற்சியாலும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது. இதனை வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் முடிவு எடுத்துக் காட்டுகின்றது.

நாடு மீதும் மக்கள் மீதும் அக்கறையுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்தே தீர வேண்டும்.

எமது நாடு மீண்டெழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். சுயநல அரசியல் எண்ணம் கொண்டவர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

அதேவேளை, வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்கள் எதிர்ப்பு என்று எவரும் அர்த்தம் கொள்ளக்கூடாது. தவறிழைத்தோர் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது தீர்க்கமான முடிவெடுக்கச் சந்தர்ப்பம் உண்டு” – என்றார்.

‘பட்ஜட்’ இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 19 எம்.பிக்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More