0
யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணி – குடம்பியன் குளத்தில் நீராடச் சென்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மணிவண்ணன் (வயது 37) என்பவரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர், குளத்தில் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போயிருந்தார்.
அவரை இரண்டு நாட்களாகக் குடும்பத்தினர் , ஊரவர்கள் தேடி வந்த நிலையில் குளத்திலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.