செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் சாவு!

வவுனியாவில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் சாவு!

1 minutes read

வவுனியா, மெனிக்பாம் பகுதியில் உள்ள ரயில் கடவையைக் கடக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் மோதுண்டு மரணமடைந்துள்ளார்.

இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் செட்டிகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து விவசாயக் காணியைப் பார்வையிடுவதற்காக மெனிக்பாம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது அந்தப் பகுதியில் அமைந்துள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட நிலையில் மன்னாரிலிருந்து மதவாச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயிலுடன் மோதுண்டு படுகாயமடைந்தார்.

அவர் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மரணமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியைச் சேர்ந்த கந்தையா மோகனதாஸ் என்ற 55 வயதுடைய குடும்பஸ்தரே இந்த விபத்தில் பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பறையனாலங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More