விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே இன்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வசந்த முதலிகே கடந்த ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அதற்கமைய, வசந்த முதலிகேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையிலேயே அவர் இன்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலைகள் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.