புடவைத் தொட்டிலில் கழுத்து இறுகிய நிலையில் 12 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹப்புத்தளை – பிடரத்மலை தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றில் அமைக்கப்பட்டிருந்த புடவைத் தொட்டிலில் கழுத்து சிக்கிய நிலையிலேயே குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
தனது இரண்டு குழந்தைகளை உறங்க வைப்பதற்காக வேறு அறைக்கு அழைத்துச் சென்ற தாய், திரும்பி வந்து பார்த்த போது, 12 வயது மகன் தொட்டில் கட்டப்பட்டிருந்த புடவையில் கழுத்து இறுகிய நிலையில் கிடந்ததைக் கண்டுள்ளார்.
எனினும், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் சடலம் மீது பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதில், கழுத்து இறுகியதால் உயிரிழப்பு ஏற்பட்டது எனத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.