Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

யாழில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

1 minutes read

யாழ். வடமராட்சி – அல்வாய் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அல்வாய் – அம்பாள் கோயிலடியைச் சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டியே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாள் வித்தியாலயத்துக்குப் பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிணற்றில் குளிப்பதற்குச் சென்றவரே தவறி வீழ்ந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த கிணறு அறுபது அடி ஆழம் கொண்டது. கிணற்றில் அமைக்கப்பட்ட கப்பி பாதுகாப்பற்ற முறையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More