வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் முன்னாள் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார்.
களுத்துறை – வாத்துவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்பந்தமான சந்திப்பின் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அதையடுத்து, அவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைகளுக்காகக் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.