யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதம் இன்று கிடைக்கப்பெறும் என்று தெரியவருகின்றது.
நாளை புதன்கிழமை அவர் கடமைகளைப் பொறுப்பேற்பார் எனவும் அறியமுடிகின்றது.
கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவரது நியமனத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட அரச அதிபராகப் பணியாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன், கடந்த முதலாம் திகதி முதல் பதவி உயர்வுடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சின் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்தார். இந்தநிலையில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய அ.சிவபாலசுந்தரன், யாழ். மாவட்ட அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.