March 24, 2023 3:39 am

பொதுநலவாய செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காகப் பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொதுநலவாய செயலாளர் நாயகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கைக்கான ஐந்து நாள் பயணத்தில், அவர் ஜனாதிபதியை மரியாதை நிமிர்த்தமாகச் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் பெப்ரவரி 3 திகதியன்று, கடல்சார் சிந்தனைக் களஞ்சியமான புவிசார் அரசியல் வரைபடத்தில் அவர் விரிவுரை ஆற்றவுள்ளார்.

பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் எதிர்வரும் முதலாம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதுடன் பெப்ரவரி 5 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்