Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருமலை மீனவர்கள் மியன்மாரில் தடுத்துவைப்பு!

திருமலை மீனவர்கள் மியன்மாரில் தடுத்துவைப்பு!

1 minutes read

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 5 மீனவர்கள் மியன்மாரின் யாங்கூன் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து குறித்த மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர்.

அந்தக் குழுவினர் திக்வெல்ல, வெலிகம மற்றும் திருகோணமலை பகுதிகளில் வசிப்பவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மீனவர்களின் படகு வேறொரு படகு மூலம் இழுத்துச் செல்லப்பட்டது என்று மீனவர்களின் உறவினர்களுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் இது குறித்து கடற்றொழில் திணைக்களத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தனர்.

இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More