Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருகோணமலை விமானப்படை நிலையத்தில் விமான விபத்தில் 2 இராணுவ வீரர்கள் பலி

திருகோணமலை விமானப்படை நிலையத்தில் விமான விபத்தில் 2 இராணுவ வீரர்கள் பலி

1 minutes read

இன்று திங்கட்கிழமை (7.8.2023) திருகோணமலையில் உள்ள விமானப்படை நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SLAF அகடமியில் காலை 11.25 மணிக்கு புறப்பட்ட பின்னர் 11.27 மணிக்கு விபத்துக்குள்ளான விமானம் PT-6 பயிற்சி விமானமாகும். பயிற்றுநர். மற்றும் பயிற்சியாளர் இருவரும் கொல்லப்பட்டனர். மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழுவொன்றை நியமித்துள்ளார்.

சீனக்குடாவில் உள்ள இலக்கம் 1 பறக்கும் பயிற்சிப் பிரிவில் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் PT-6 விமானம் இன்று திங்கட்கிழமை (7) காலை வான் சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டதாக விமானப்படை ஊடக குழுமத்தின் பணிப்பாளர் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More