Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மலையக எழுச்சிப் பாத யாத்திரையில் தேசப்பிரியவும் பங்கேற்பு!

மலையக எழுச்சிப் பாத யாத்திரையில் தேசப்பிரியவும் பங்கேற்பு!

1 minutes read

மலையக மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்பட்டு வரும் மலையக எழுச்சி நடை பயணத்துக்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவும் ஆதரவு வழங்கியுள்ளார்.

தம்புள்ளையில் இருந்து இன்று (11) காலை ஆரம்பமான பாத யாத்திரையில் பங்கேற்று அவர் தமது ஆதரவை வெளிப்படுத்தினார்.

மலையகத் தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து ‘மலையக எழுச்சிப் பயணம்’ முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2023 ஜுலை 28 ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பமான குறித்த பாத யாத்திரை நாளை 12 ஆம் திகதி மாத்தளையைச் சென்றடையவுள்ளது. நேற்று (10) ஓய்வு எடுக்கப்பட்டது. இன்று (11) காலை மீண்டும் யாத்திரை ஆரம்பமானது.

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், சிவில் அமைப்புகள் மற்றும் மலையக சமூகம்சார் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய ‘மாண்புமிகு மலையக மக்கள்’ கூட்டிணைவினால் இப்பாத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More