Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மஹிந்தவைச் சந்தித்த ஜெய்சங்கர்!

மஹிந்தவைச் சந்தித்த ஜெய்சங்கர்!

0 minutes read

இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுடன் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவைக் கொழும்பில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடிவிட்டே நாடு திரும்பியிருந்தார்.

மஹிந்த ராஜபக்சவுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் அரசியல் நிலவரம், ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்நிறுத்தவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பில் மஹிந்த ராஜபக்சவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் இணைந்திருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More