Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்குக் கொரோனாவா?

வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்குக் கொரோனாவா?

0 minutes read

வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில், அவருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் அவரின் உடல் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

அனுராதபுரம், பதவியா பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான நபர் சிறுநீரக நோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நீமோனியா காய்ச்சலாக மாறி நேற்று இரவு அவர் மரணமடைந்தார்.

அவருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவருடைய உடல் மாதிரிகள் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More