Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

வவுனியாவில் அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

1 minutes read
வவுனியா, ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைவிடப்பட்ட கற்குவாரியாகக் காணப்பட்ட அந்தப் பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக அந்தப் பகுதிக்குச் சென்றவர்களால் ஓமந்தைப் பொலிஸாருக்குத் தகவல் தெரியப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் அழுகிய நிலையில் உள்ளமையால் மேற்படி வயோதிபர் சில தினங்களுக்கு முன்னராகவே இறந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தைப் பொலிஸார், சடலத்தை உடற்கூற்றுப்  பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More