Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரச அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ். பல்கலை சமூகம் போராட்டம்!

அரச அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ். பல்கலை சமூகம் போராட்டம்!

2 minutes read

தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் அரச அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் அரச அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, “சிங்கள பௌத்தமயமாக்கலை உடன் நிறுத்து”,  “குருந்தூர்மலை எங்கள் சொத்து”,  “வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து”, “மண் துறந்த புத்தருக்கு எங்கள் மண் மீது ஆசையா?” “சர்வதேசமே காசாவும் இலங்கையும் வேறு வேறா?”, “பண்பாட்டு படுகொலையை உடன் நிறுத்து”, “திட்டமிட்ட கைதுகளை உடன் நிறுத்து” போன்ற கோஷங்களை மாணவர்கள் எழுப்பினர்.

இப் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊழியர் சங்கத்தினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More