செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருமலையில் மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு! – இருவர் சந்தேகத்தில் கைது

திருமலையில் மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு! – இருவர் சந்தேகத்தில் கைது

1 minutes read
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை, முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று தோணியொன்றில் மீன்பிடிக்கச் சென்ற இலங்கைத்துறை, முகத்துவாரத்தைச் சேர்ந்த வடிவேல் மகேந்திரன் (வயது 53) என்ற மீனவர் கடலில் காணாமல்போயிருந்த நிலையில், அவரது சடலம் இன்று பிரதேச மீனவர்களால் மீட்கப்பட்டது.

இவர் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகொன்று மோதியிருக்கலாம் என்றும், படகில் வந்தோர் தப்பித்துச் சென்றிருக்கலாம் என்றும், இதனால் தோணி கடலில் புரண்டிருக்கலாம் என்றும்  சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தோணியில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் படகில் மீன்பிடியில் ஈடுபட்ட படகோட்டி மற்றும் உதவியாளர் உட்பட இருவரை ஈச்சிலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சடலத்தை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More