செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த பிணையில் விடுவிப்பு!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த பிணையில் விடுவிப்பு!

0 minutes read

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவைப் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மஹிந்தானந்த அளுத்கமகே சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று காலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராக மஹிந்தானந்த அளுத்கமகே கடமையாற்றியபோது, தரமற்ற உரங்களை இறக்குமதி செய்வதற்காக சீன நிறுவனத்துக்குப் பணம் செலுத்தியமை தொடர்பில், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த 19ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More