Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் மாறி வரும் பருவ நிலையும், குழந்தைகளுக்கு வரும் நோய்களும்…

மாறி வரும் பருவ நிலையும், குழந்தைகளுக்கு வரும் நோய்களும்…

2 minutes read

குழந்தைகளுக்கு மண்டை ஓடு மெலிதாக இருக்கும். செல்போனை குழந்தைகள் பார்க்கும் போது செல்போனின் கதிர்வீச்சு மூளையைதாக்கும் அபாய நிலை உள்ளது.

தட்ப வெப்ப மாற்ற நிலை காரணமாக இந்தியா முழுவதும் தற்போது பலவித வைரஸ் கிருமிகள் பெருக்கம் ஏற்பட்டு ஒருவித காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பனிக்காலம் முடிந்தாலும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதும் தற்போது பரவும் காய்ச்சலுக்கு ஒரு காரணம். இந்தக்காய்ச்சல் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் அதிகம் பாதித்து உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்கள் சிவப்பாக மாறி எரிச்சலை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளுக்கு தொண்டைவலியும், உடல் வலியும் ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கண் டாக்டரை சந்தித்து நோய் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக்காய்ச்சல் ஒரு வாரம் வரை இருக்கும். கண்ணுக்கு பாதிப்பு இருந்தாலும் பெரிய அளவில் இருக்காது. குழந்தைகளுக்கு கண்வலியுடன் இருமலும், சளியும் இருக்கும். இதனால் பெற்றோர்கள் தாமதிக்காமல் குழந்தைகள் டாக்டர் மற்றும் கண் டாக்டரை அணுகி மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பக்கூடாது. பள்ளி சென்று திரும்பியவுடன் குழந்தைகளை சுத்தப்படுத்தி தூய்மையான ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் தொழிற்நுட்ப வளர்ச்சியில் செல்போன் சிறந்த கண்டுபிடிப்பாகும். இருப்பினும் இதில் சாதக பாதகங்களும் உள்ளன. செல்போனில் ’புளூலைட்’ உள்ளது. நீண்ட நேரம் செல்போனை பார்க்கும் போது புளுலைட் கண்களை பாதிக்கும். ஓய்வே இல்லாமல் செல்போனை பயன் படுத்துவதால் பார்வைக்கோளாறு, தலைவலி, மந்தமான பார்வை, ஒளியைக்காணும் போது கண்ணில் ஏற்படும் கூச்சம், கண்கள் சிகப்பு ஏற்படுதல் போன்றவை அடிக்கடி ஏற்படும்.

கண்வலி, நிறங்கள் மங்கலாக தெரிதல். கண் உலர்ந்து காணப்படுதல், அதோடு கண் எரிச்சல் போன்றவை கண்களுக்குண்டான பிரச்சினைகளை உறுதிப்படுத்தும். நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளின் நிழலும் கண்ணின் பின்புறம் உள்ள விழித்திரையில் குவிகிறது. நீண்ட நேரம் செல்போனை பார்க்கும் போது கண்ணில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. செல்போனை இருளில் உபயோகிக்கக்கூடாது. வெளிச்சத்தில் தான் பயன்படுத்த வேண்டும். செல்போனை கண்களுக்கு அருகில் வைத்து பார்க்கக்கூடாது. தூரத்தில் வைத்து தான் பார்க்க வேண்டும். கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இதனால் கண்களில் கண்ணீர் வரும்.

ஸ்மார்ட்போனை தூரத்தில் வைத்து தான் பார்க்க வேண்டும். இருளில் பார்த்தால் கண் அழுத்தம், தலைவலி ,கழுத்துவலி ஏற்படும். ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழிக்கேற்ப செல்போனை அதிகமாக பயன் படுத்தினால் அதனால் பல்வேறு பிரச்சினைகளை குறிப்பாக கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

முன்பெல்லம் வீட்டில் குழந்தைகள் அழுதால் பெண்கள் தாலாட்டுப்பாடல்கள் பாடி சமாதானப்படுத்துவார்கள். தற்போதுள்ள கம்ப்யூட்டர் உலகில் குழந்தைகள் கையில் செல்போனில் தாலாட்டுப்பாடல். அல்லது கார்ட்டூன்களை போட்டு கொடுத்து விடுகிறோம். குழந்தைகளும் அழுகையை நிறுத்திவிட்டு செல்போனை கூர்ந்து கவனிக்கின்றன. இதில் இன்னொரு பிரச்சினையும் இருப்பதை மறந்து விடக்கூடாது.குழந்தைகளுக்கு மண்டை ஓடு மெலிதாக இருக்கும். செல்போனை குழந்தைகள் பார்க்கும் போது செல்போனின் கதிர்வீச்சு மூளையைதாக்கும் அபாய நிலை உள்ளது. சில சமயம் மூளையில் கட்டிக்கூட ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் ஆரோக்கியம் கருதி அவர்களிடம் பெற்றோர்கள் செல்போனை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More